பருத்துறை- புற்றளையில் பயங்கரம்..! வீடு புகுந்து பாாிய கொள்ளை.

ஆசிரியர் - Editor I
பருத்துறை- புற்றளையில் பயங்கரம்..! வீடு புகுந்து பாாிய கொள்ளை.

யாழ்.புலோலி தெற்கு புற்றளை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்து பெருமளவு நகைகள், பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனா். 

யாழ்ப்பாணம், புலோலி தெற்கு, புற்றளைப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர். 

இதன்போது வீட்டாரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு