9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த தமிழ் பெண்..! காரணம் தொியாமல் திணறும் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த தமிழ் பெண்..! காரணம் தொியாமல் திணறும் பொலிஸாா்.

கொழும்பில் உள்ள தனியாா் வைத்தியசாலை ஒன்றின் 9வது மாடியிலிருந்து குதித்து பெண் ஒருவா் தற்கொலை செய்துள்ளாா். 

31 வயதான கருண்யா சிங்காரவேல் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் மனித வள முகாமைத்துவ பிரிவின் உதவி முகாமையாளராக செயற்பட்ட பெண்யே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தனது அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளர். 

சற்று நேரத்தில் 9 வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பெண் பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு