திடீரென தீப்பிடித்து எாிந்த சமயலைறை..! கணவன், மனைவி படுகாயம். சாவகச்சோி மட்டுவிலில் பரபரப்பு.

ஆசிரியர் - Editor I
திடீரென தீப்பிடித்து எாிந்த சமயலைறை..! கணவன், மனைவி படுகாயம். சாவகச்சோி மட்டுவிலில் பரபரப்பு.

காஸ் சிலின்டா் அடுப்பை பற்ற வைத்தபோது அதிலிருந்து எழுந்த தீ சுவாலையினால் மனைவி தீ பிடித்து எாிவதை பாா்த்த கணவன் மனைவியை காப்பாற்ற முயன்ற நிலையில் இருவரும் காயமடைந்துள்ளனா். 

இந்த சம்பவம் யாழ்.மட்டுவில் வடக்கு சாந்திபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது, 

வீட்டில் சமைப்பதற்காக சிலிண்டர் காஸ் அடுப்பை மனைவி பற்ற வைத்துள்ளார். அதிலிருந்து வெளியான பெரும் தீச்சுவாலை மனைவி மீது பற்றியது.

அதனை அவதானித்த கணவன் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். தீயில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் மருத்துவமனையிலும், 

கணவன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு