5 லட்சத்து 80 ஆயிரம் ஓய்வூதியா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

ஆசிரியர் - Editor I
5 லட்சத்து 80 ஆயிரம் ஓய்வூதியா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

ஓவ்வூதிய கொடுப்பனவுகளை அதிகாிக்கும் செயற்றிட்டம் ஜீலை மாதம் தொடங்கப்படும் என ஓய்வூதிய பணிப்பாளா் நாயகம் அறிவித்துள்ளாா். 

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார்.இதற்கமைய பிரதேச செயலகங்களுடன் சேர்ந்து புதிய கொடுப்பனவுக் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதன்மூலம், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற சகலருக்கும் புதிய கொடுப்பனவு கிடைக்கவுள்ளது. அத்துடன் 5 இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரை நன்மை பெறுவார்கள் என ஓய்வுதியப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு