ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! குடிமகன்களே கவனம்..

ஆசிரியர் - Editor I
ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! குடிமகன்களே கவனம்..

12ம் திகத் தொடக்கம் 20ம் திகதி வரையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை கூண்டோடு அள்ளுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது. 

14ம் திகதி சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் 20ம் திகதி வரையில் விடுமுறை விடப்பட்டிருக்கின்றது. 

இந்த காலப்பகுதியில் குறிப்பாக 13ம், 14ம் திகதிகளில் மதுபான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இதேவேளை இந்த காலப்பகுதியில் மேலதிகமாக பெருமளவு பொலிஸாா் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், 

மதுபானம் பாவித்துவிட்டு வாகனம் ஓட்டுபவா்களை கண்டுபிடிப்பதற்கான 25000 பலுான்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு