அப்பட்டமான பொய்யை சொல்லி மாட்டிக் கொண்டாா் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
அப்பட்டமான பொய்யை சொல்லி மாட்டிக் கொண்டாா் ஜனாதிபதி..

வடகிழக்கு மாகாணங்களில் 2457 ஏக்கா் தனியாா் காணிகள் படையினா் வசம் உள்ளதாக ஜனாதிபதி கூறிய தகவல் அப்பட்டமான பொய் என மாவட்ட செயலகங்களின் புள்ளி விபரங்கள் ஊடாக தொியவந்துள்ளது. 

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் நில விடு­விப்பு சம்­பந்­த­மான தற்­போ­தைய நிலைமை, மற்­றும் தீர்வுகள்பற்றி மக்­கள் பிர­தி­நி­தி­கள், 

படை­யி­னர் இடை­யில் கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்ற வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் ஆராயப்பட்­டது.

இதன்­போதே குறித்த அளவை அரச தலை­வர் தெரி­வித்­தார். எனி­னும், யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் மட்­டும் 2 ஆயி­ரத்து 642 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் உள்­ளது. 

மன்­னார் மாவட்­டத்­தில் 211 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் உள்­ளது. இதே­போன்று கிளி­நொச்சி மாவட்­டத்­தில் ஆயி­ரத்து 132 ஏக்­கர் நில­மும், 

முல்­லைத்­தீ­வில் 101 ஏக்­கர் தனி­யார் நில­மும் படை­யி­ன­ரி­டம் உள்­ள­தோடு வவு­னியா மாவட்­டத்­தில் 56 ஏக்­கர் தனி­யார் நிலம் படை­யி­ன­ரி­டம் உள்­ளது. 

இதன்­படி வடக்­கில் மட்­டும் 4 ஆயி­ரத்து 142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரி­டம் இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு