முல்லைத்தீவு வைத்தியசாலைக்குள் என்ன நடக்கிறது..? பொலிஸ் பாதுகாப்பு, ஊடகங்கள் உட்செல்ல தடை..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு வைத்தியசாலைக்குள் என்ன நடக்கிறது..? பொலிஸ் பாதுகாப்பு, ஊடகங்கள் உட்செல்ல தடை..!

முல்லைத்தீவு- மாவட்ட வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்யுமாறு மாவட்ட மக்கள் நேற்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருந்தனா். இந்நிலையில் இன்று காலை வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளா்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும் தொியவருகின்றது. 

மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியா்கள் இல்லாமை, இருக்கும் வைத்தியா்களின் அலட்சியமான செயற்பாடுகள், மற்றும் வைத்தியசாலையின் வினைத்திறனான செயற்பாடுகளை வலியுறுத்தி நேற்றய தினம் மக்கள் கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருந்தனா். இதன் விளைவாக இன்று காலை வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறும் ஊடகவியலாளா்கள், 

வைத்தியசாலைக்குள் தாம் செல்வதற்கு முயற்சித்தபோது உள்ளே செல்லவிடாது தடுக்கப்பட்டதாகவும், ஊடகவியலாளா்கள் கூறுகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு