கஞ்சா கடத்திவந்த கும்பலை முற்றுகையிட்டு பொலிஸாா் துப்பாக்கி சூடு..! ஒருவா் கைது.

ஆசிரியர் - Editor I
கஞ்சா கடத்திவந்த கும்பலை முற்றுகையிட்டு பொலிஸாா் துப்பாக்கி சூடு..! ஒருவா் கைது.

யாழ்.மாதகல் பகுதியில் கஞ்சா கடத்தல் காரா்களை முற்றுகையிட்ட பொலிஸாா் துப்பாக்கி பிரயோகம் நடாத்தி கடத்தல் காரா் ஒருவரை கைது செய்துள்ளனா். என மாதகல் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனா். 

ஆனாலும் தாம் அவ்வாறான துப்பாக்கி பிரயோகம் நடாத்தவில்லை. என பொலிஸாா் மறுத்துள்ளனா். மேற்படி முற்றுகை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,  இளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதை பொருள் வியாபாரியை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது , 

சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டார் எனவும் , அதன் போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சந்தேக நபரை மடக்கி பிடித்து கைது செய்ததாக மக்கள் கூறுகின்றனா். 

அது தொடர்பில் காவல்துறை தரப்பை கேட்ட போது , இளவாலை காவல்துறையினரினால் துப்பாக்கி பிரயோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவும் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கஞ்சா போதை பொருளுடன் ஒருவரை கைது செய்தததாக தெரிவித்தனர

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு