தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கி, கட்டிக்காத்த மர முந்திாிகை தோட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் கூட்டுத்தாபனம்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கி, கட்டிக்காத்த மர முந்திாிகை தோட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் கூட்டுத்தாபனம்..!

பூநகாி, வெள்ளாங்குளம், கொண்ச்சி போன்ற பகுதிகளில் உள்ள மர முந்திாிகை தோட்டங்களை தம்மிடம் வழங்குமாறு மர முந்திாிகை கூட்டுத்தாபனம் மாவட்ட செயலகங்களிடம் விண்ணப்பம் செய்துள்ளது. 

வெள்­ளாங்­கு­ளத்­தில் 500 ஏக்­க­ரும் பூந­க­ரி­யில் 474 ஏக்­கர் நில­மும் கொண்­டச்­சி­யில் 450 ஏக்­கர் நிலம் என்­ப­ன­வற்றை தம்­மி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு திணைக்­க­ளம் கோரி­யுள்­ளது.

இதே­நே­ரம் வெள்­ளாங்­கு­ளம் நிலத்­தில் அந்­தப் பகு­தி­யில் நில­மற்ற மக்­க­ளுக்­குப் பகிர்ந்து வழங்­கு­வ­தற்­கும் கொண்­டச்சி நிலம் ஏற்­க­னவே இவ்­வா­றான திட்­டத்­துக்­குள்­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

நிலம் தொடர்­பில் இறுதி முடிவு எடுக்­கும் வகை­யில் மாவட்­டத்­தின் மேல­திக செய­லர்­களை திணைக்­க­ளத்­தில் இன்று இடம்­பெ­றும் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கு­கொள்­ளு­மா­றும் குறித்த திணைக்­க­ளம் விடுத்த அழைப்­பின் பெய­ரில் மேல­திக மாவட்­டச் செய­லர்­கள் (காணி) கொழும்­புக்­குச் சென்­றுள்­ள­னர்.

இந்த நிலை­யில், பண்­ணை­க­ளைப் படை­யி­னர் 10 ஆண்­டு­க­ளா­கக் கைய­கப்­ப­டுத்தி வரு­மா­னத்­தைப் பெற்றபோது வாய் மூடி­யி­ருந்த திணைக்­க­ளங்­க­ளுக்கு தாரை­வார்க்­கும் செயற்­பாட்­டுக்கு

மாவட்­டச் செய­ல­கங்­கள் உடன்­ப­டக் கூடாது. அந்த நிலத்தை மாவட்­டத்­தில் வாழ்­வி­டம் அற்­ற­வர்­க­ளுக்­கும் கால்ந­டை­க­ளின் மேச்­சல்­த­ரை­க­ளுக்­கும் பெற்­றுத்­தர நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு