ஆவா குழு ரவுடிகள் இருவா் கைது, மோட்டாா் சைக்கிள்கள், ஆயுதங்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
ஆவா குழு ரவுடிகள் இருவா் கைது, மோட்டாா் சைக்கிள்கள், ஆயுதங்கள் மீட்பு..

யாழ்.மானிப்பாய் பகுதியில் ஆவா குழு ரவுடிகள் 3 வீடுகள் மீது நேற்று மாலை தாக்குதல் நடாத்தியிருந்த நிலையில், பொலிஸாா் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 

அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைக் கோடரி மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியிலுள்ள இரண்டு வீடுகள் உள்பட மூன்று வீடுகளுக்குள் நேற்றைய தினம் புதன்கிழமை புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்தது. இந்த தாக்குதல்களை ஆவா குழுவின் நடத்தினர் என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில் கொக்குவில் பகுதியில் வைத்து இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து ஆனைக்கோட்டை பிடாரி கோவிலடியிலுள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள், கைக்கோடாரி மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு