குருநாகலில் தமிழ் இளைஞா்கள் மீது காடையா்கள் குழு தாக்குதல், யாழ்ப்பாணத்தை சோ்ந்த இரு இளைஞா்களுக்கு காயம்..

ஆசிரியர் - Editor I
குருநாகலில் தமிழ் இளைஞா்கள் மீது காடையா்கள் குழு தாக்குதல், யாழ்ப்பாணத்தை சோ்ந்த இரு இளைஞா்களுக்கு காயம்..

குருநாகல் ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞா்கள் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல் நடாத்தியதில் தமிழ் இளைஞா்கள் இருவா் காயமடைந்துள்ளனா். 

தமிழ், சிங்கள புத்தாண்டு காரணமாக நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட தொடருந்தில் இடநெருக்கடி காணப்பட்டது.  ஆசனங்களை பிடிப்பதற்காக மக்கள் முண்டியடித்தனர்.

ஆசனமொன்றை பிடிப்பது தொடர்பில் தமிழ், சிங்கள இளைஞர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன் காரணமாக இரு பகுதியினரும் பொல்ககவெல பகுதியில் மோதலில் ஈடுபட்டனர்.

மோதலில் ஈடுபட்ட சிங்கள தரப்பு குருநாகல் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு ஆயத்தமானபோது அவர்களுக்கு ஆதரவாக பொல்லுகளுடன் வந்த சுமார் பத்து பேர் அடங்கிய கும்பல்,   

தமிழ் இளைஞர்களை சரமாரியாக தாக்கியது. இதனை தடுக்க முற்பட்ட ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தாக்கப்பட்டனர்.

இச் சமயத்தில் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புத்தி சாதூரியமாக செயற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸாரையும் வரவழைத்தனர்.

இச் சம்பவத்தில் பாடசாலை வீதி, மானிப்பாய் என்ற விலாசத்தை சேர்ந்த வீரசிங்கம் திவ்விய பிரகாஷ் என்ற இளைஞரும் வேறு இரண்டு இளைஞர்களும் காயமடைந்தனர்.

இச் சம்பவத்தால் தொடருந்து இரண்டு மணி நேரம் தாமதமானது.சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு