இன்று நள்ளிவு சாவுமணி..! நாளை முதல் நிரந்தர வெளிச்சமாம் நம்புங்கள்.

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிவு சாவுமணி..! நாளை முதல் நிரந்தர வெளிச்சமாம் நம்புங்கள்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் என மின்சக்தி அமைச்சு தொிவித்துள்ளது. 

இதற்கமைய நாளை முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவீ கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட வேண்டும் என அமைச்சர்கள் கூறியதன் காரணமாக அந்த யோசனை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு