குடும்ப சண்டைக்குள் மூக்கை நுழைத்த பொலிஸாருக்கு அடி..

ஆசிரியர் - Editor I
குடும்ப சண்டைக்குள் மூக்கை நுழைத்த பொலிஸாருக்கு அடி..

வெளிநாட்டிலிருந்த வந்த கணவருக்கும் மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கை தீா்க்க சென்றிருந்த பொலிஸாா் மீது வெளிநாட்டிலிருந்து வந்தவா் நடாத்திய தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் நேற்று முன்தினம் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெளி­நாட்­டில் இருந்து வந்த கணவ­ருக்­கும், மனை­விக்­கும் இடையே முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. அது தொடர்­பாக அச்­சு­வே­லிப் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ளது. 

அதை­ய­டுத்து விசா­ரணை நடத்த அங்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் சென்­றுள்­ளார். அங்கு சென்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைப் பெண்­ணின் கண­வர் தாக்­கி­யுள்­ளார். சீரு­டை­யை­யும் கிழித்­துள்­ளார். தாக்­கு­த­லில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் காய­ம­டைந்­தார். 

அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். தாக்­கு­தல் நடத்­தி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு