உறக்கத்திலேயே உயிாிழந்த 21 வயது இளைஞன்..! சுன்னாகத்தில் சோகம்.

ஆசிரியர் - Editor I
உறக்கத்திலேயே உயிாிழந்த 21 வயது இளைஞன்..! சுன்னாகத்தில் சோகம்.

இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்த 21 வயதான இளைஞன் உறக்கத்திலேயே உயிாிழந்த சம்பவம் யாழ்.சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சோ்ந்த 21 வயதான சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் என்ற இளைஞனே இவ்வாறு உயிாிழந்துள்ளாா். 

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழமை போல் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் , இரவு உணவை உட்கொண்டு விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலையான நேற்று செவ்வாய்க்கிழமை நீண்ட நேரமாகியும் மகன் எழும்பாததை அடுத்து தாயார் சென்று எழுப்ப முற்பட்டுள்ளார். 

அதன் போது அசைவின்றி மகன் காணப்பட்டதை அடுத்து , உடனடியாக மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும், 

அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு