யாழ்.புத்துாா் பகுதியில் பதற்றம், கைக்குண்டு வெடிப்பு, பொலிஸ், விசேட அதிரடிப்படை களத்தில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துாா் பகுதியில் பதற்றம், கைக்குண்டு வெடிப்பு, பொலிஸ், விசேட அதிரடிப்படை களத்தில்..

யாழ்.புத்துாா் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

இந்த சம்பவம் புத்துாா் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான். 

இதன்போது பயன்பாடற்ற காணி ஒன்றிற்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்துள்ளான். அந்த கைகுண்டை வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது. 

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான். 

இந்த சம்பவம் தொடா்பில் அச்சுவேலி பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப்படையினா் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு