யாழ்.மாநகாின் அபிவிருத்தியா..? 63 குடும்பங்களின் வயிற்று பசியா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகாின் அபிவிருத்தியா..? 63 குடும்பங்களின் வயிற்று பசியா..?

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள வியாபாாிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும். எனக்கேட்டு இன்று யாழ்.மாநகரசபை முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனா். 

யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது.

அதனால் பேருந்து நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வியாபாரிகளை அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 63 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து மாற்று இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு