தீா்மானங்களால் நிறைந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..

ஆசிரியர் - Editor I
தீா்மானங்களால் நிறைந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் தேவைக்காக  ஒரு துண்டு காணியை கூட வழங்குவதில்லை. என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தீா்மானங்கள் நேற்று நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வருட முத­லா­வது மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் இணைத்­த­லை­வர்­க­ளான சோ.சேனாதிராசா மற்­றும் கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் விய­ஜ­கலா மகேஸ்­வ­ரன் ஆகி­யோர் தலை­மை­யில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்­றது. 

இந்­தக் கூட்­டத்­தில் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கருத்து கூறுகையில், 

அரச தலை­வர் மற்­றும் ஆளு­ந­ருக்கு என்று வரம்பு எல்­லை­கள் உள்­ளன. அதை அவர்­கள் தெரிந்து செயற்­பட வேண்­டும். தன்­னிச்­சை­யா­கச் செயற்­பட முடி­யாது.

எமக்­கும் மக்­க­ளுக்­கும் தெரி­யா­மல் இங்கு காணி அப­க­ரிப்­பு­கள் நடை­பெ­று­கின்­றன. அர­சு­டன் கதைத்து முடிவு எட்­டப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் செய­ல­ணி­யின் தீர்­மா­னம், முறை­யான அமைச்­ச­ரவைத் தீர்­மா­னம், மக்­க­ளின் கருத்து, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­கள் பெறப்­ப­டா­மல் காணி சுவீ­க­ரிப்பு தொடர்பான அறி­வு­றுத்­தல்­கள் மேல் இடங்­க­ளில் இருந்து வந்­தால் பிர­தேச செய­லர்­கள் அதை நடைமுறைப்படுத்த முன்­னர் எமக்­குத் தெரி­விக்க வேண்­டும். 

இந்த விட­யத்­தில் பிர­தேச செய­லர்­கள் தெளி­வாக இருங்­கள். அண்­மை­யில் வலி­கா­மம் வடக்­கில் காணி­கள் அப­க­ரிப்பு பதற்கு மக்­க­ளின் எதிர்ப்பு, எங்­க­ளின் பேச்சு மூல­மாக நிறுத்­தப்­பட்­டது. அதில் 734 ஏக்­கர் சிமெந்துத் தொழிற்­சா­லைக்­குச் சொந்­த­மா­னது. 

ஆகவே அதனை மீள இயங்க வைப்­ப­தற்­கும் தொழில் பேட்­டை­களை அமைப்­ப­தற்­கும் அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதை­யும் கடற்­படை கேட் கின்­ற­னர். அவர்­க­ளுக்கு எத்தனை ஏக்­கர் வேண்­டும் என்ன தேவைக்கு வேண்­டும் என்­பது தொடர்­பில் முத­லில் ஆராய வேண்­டும்  என்றார்.

கூட்­டம் பற்றி அறி­விப்பு
மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­கள் 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் நிறை­வு­றுத்­தப்­பட வேண்­டும். பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்க்க முடி­யாத விட­யங்­களே இங்கே முதன்­மை­யாக ஆரா­யப்­பட வேண்­டும் என்று தற்­போது அமைச்­சி­னால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.

அனு­ம­திக்­கப்­பட்ட
திட்­டங்­கள்

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கம் ஊடாகக் கிடைக்கப்­பெற்ற நிதி மூலங்­க­ளின் அடிப்­ப­டை­யில் 13 அரச அலு­வ­ல­கங்­கள் ஊடாக 5 ஆயி­ரத்து 973அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் 8 ஆயி­ரத்து 293 மில்­லி­யன் ரூபா­ செலவில் செய்து முடிப்­ப­தற்­குக் கூட்­டத்­தில் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

கிராம எழுச்சி
கிராம எழுச்­சித் திட்­டத்­தின் கீழ் வைக்­கப்­ப­டும் பெயர்ப் பலகை தேவை­யில்லை. அதற்­குச் செல­வி­டும் பணத்தை முழு­மை­யாக அந்­தத் திட்­டத்­துக்கே செல­வி­ட­லாம் என்று தெரி­வித்த வடக்கு மாகாண சபை அவைத்­த­லை­வர் சி.வி.கே சிவ­ஞா­னம், ஒரு திட்­டத்­துக்கு 30 ஆயி­ரம் ரூபா ஒதுக்­கப்­பட்­டால் பெயர்ப் பல­கைச் செலவு போக மிகுதி சுமார் 23 ஆயி­ரம் ரூபாவே கிடைக்­கி­றது -– என்­றார்.

இதை மாகா­ணத்­தின் ஊடாக மேற்­கொள்ள வேண்­டும் என ஈ.பி.டி.பி பிர­தி­நிதி கோரி­னார். மாகா­ணத்­தின் 15 அதி­கா­ரங்­க­ளைப் பறிப்­ப­தற்கு ஆத­ர­வா­கக் கொண்டு வரப்­பட்ட திவி­நெ­கும சட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­வர்­கள் இன்று தமது பிடி இல்­லா­த­ப­டி­யால் இதே கோரிக்­கையை வைப்­பது வேடிக்­கை­யா­னது – என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ ரன் தெரி­வித்­தார்.

பெயர்ப் பலகை போடு­வது நிதி வீண் விர­யம் என்­றால் இது பற்­றித் தீர்­மா­னம் எடுத்து அர­சுக்கு அனுப்­பு­வோம் என்­றார் சேனா­தி­ராசா.

காணி சுவீ­க­ரிப்பு
“எதிர்­வ­ரும் 11ஆம் திகதி மண்டை தீவுப் பகு­தி­யில் 11 பேரின் காணி­கள் கடற் படைக்கு வழங்­கு­வ­தற்கு அள­வீட்டு பணி­கள் நடை­பெ­ற­வுள்­ளன” என்று நாட­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் தெரி­வித்­தார். “எமக்­குத் தெரி­ய­ாமால் எந்­தக் காணி­யும் சுவீ­க­ரிப்­ப­தற்கு அனுமதி­யில்லை. இது தொடர்­பாக உரிய தரப்­பி­ன­ரு­டன் பேசு­கி­றேன்” என்று மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

“நான்கு பேருக்கு சொந்­த­மான 12 பரப்­புக் காணியை மானிப்­பாய் பொலிஸ் நிலைய விடுதி மற்­றும் அணி வகுப்பு மரி­யாதை செய்­யும் இட­மாக மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது” என்று சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர் தெரி­வித்­தார்.

 “காணி உரி­மை­யா­ளர்­கள் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் அரு­கில் உள்ள இடத்­தில் வாட­கைக்கு இருக்­கின்­ற­னர். பொலிஸ் நிலை­யத்­துக்­குத் தேவை­யான காணி ஒன்று நவா­லி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 3 பரப்­புக் காணி உரி­மை­யா­ளர் ஒரு­வ­ரின் சம்­ம­தத்­து­டன் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் 12 பரப்­புக் காணி­யும் வேண்­டும் என்று கோரி அதற்­கான அள­வீட்டு பணி­கள் நடை­பெ­ற­வுள்­ளது. இது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பிர­தேச செய­லர் தெரி­வித்­தார்.

பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கூட்­டத்­தில் கலந்து கொண்­ட­மை­யால் அவ­ரு­டன் கலந்­து­ரை­யாடி மாற்­றுக் காணி ஒன்றை அடை­யா­ளம் காணக் கூட்­டத்­தில் இணக்­கம் காணப்­பட்­டது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் பொலி­ஸார் தவிர்ந்த இரா­ணு­வத்­தி­னர் மற்­றும் கடற் படை­யி­னர் 43 இடங்­க­ளில் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு அள­வீட்டுப் பணி­கள் நடை­பெ­ற­வுள்­ள­தாக மூத்த நில அளவை அதி­காரி தெரிவித்­தார். 

இந்­தக் காணி­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு இரண்டு பாது­காப்­புப் பிரி­வி­ன­ரும் கைய­கப்­ப­டு­வ­தற்கு அளவீட்டுப் பணி­க­ளுக்­கான பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது – என்­றார். 

அவை உரி­மை­யா­ளர்­க­ளின் சம்­ம­தத்­து­டன் வழங்­கப்­பட்­டுள்­ளதா அல்­லது பல­வந்­த­மாக அள­வீட்­டுப் பணி­கள் நடை­பெ­ற­வுள்­ளதா என்று பிர­தேச செய­லர்­கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்க வேண்­டும். அப்­போ­து­தான் நட­வ­டிக்கை எடுக்க முடி­யும் – என்­றார் சேனா­தி­ராசா.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­துவ மனைக்கு வழங்க வேண்­டிய காணி­யைப் பெற்றுத் தாருங்­கள் என்று போதனா மருத்­துவ மனைப் பணிப்­பா­ளர் தெரி­வித்­தார். மருத்­துவ மனைக்கு வழங்­கு­வ­தற்கு முன்­னரே தீர்மா­னிக்­கப்­பட்ட 3 பரப்­புக் காணி மருத்­துவ மனைக்கு முன்­பா­க­வுள்­ளது. 

அங்கு சில பொலி­ஸார் காவ­லுக்கு உள்­ள­னர் என்­றார். காணி தனி­யார், அர­சுக்­குச் சொந்­த­மா­னதா என்ற உரி­மம் தொடர்­பில் ஆரா­யப்­பட்டு அதனை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரிவிக்கப்பட்டது.

வீட­மைப்பு
வலி. வடக்கு மாவை கலட்­டி­யில் பல வீடு­கள் கட்­டப்­பட்­ட­போ­தும் எவ­ரும் வசிப்­ப­தில்லை. வீடு­கள் இல்லாதவர்க­ளுக்கு அவற்றை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமா என்று ஈபி­டிபி பிரதி நிதி கேள்வி எழுப்­பி­னார். அங்கு வீடு­கள் இல்­லா­த­வர்­க­ளுக்கே அவை வழங்­கப்­பட்­டுள்­ளன. 

வேலை நிமித்­தம் வேறு இடத்­தில் உள்­ள­னர். வேலை நிறை­வ­டைந்து இங்­குள்ள வீடு­க­ளில் தான் வசிக்கின்றனர். வீடு­கள் ஒன்­றும் வெறு­மை­யாக இல்லை – என்று வலி. வடக்­குப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் தெரி­வித்­தார்.

சாவ­கச்­சேரி பிர­தே­சத்தை மீள் குடி­யேற்ற பிர­தே­ச­மாக ஒரு­வ­ரும் கரு­த­வும் இல்லை கண்டு கொள்­ள­வும் இல்லை இவ்­வாறு சாவ­கச்­சேரி பிர­தேச சபைத் தவி­சா­ளர் தெரி­வித்­தார். எமது பிர­தே­சத்­தில் சுமார் ஆயி­ரம் வீடு­கள் தேவை­யாக உள்­ளன. ஆனால் மக்­க­ளுக்கு வீடு­க­ளும் இல்லை காணி­க­ளும் இல்லை -– என்­றார். அரச காணி­கள் இங்கு இல்லை என்று பிர­தேச செய­லர் பதி­ல­ளித்­தார்.

காணி உரி­மம் பிழை
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் கள்ள உறுதி முடித்து காணி­களை பதிவு செய்­யும் நட­வ­டிக்­கை­யும் முன்னெடுக்கப்­பட்டு வரு­கி­றது என்று மேல­திக மாவட்­டச் செய­லர் தெரி­வித்­தார். வீடு­களை நாம் வழங்­கும் போது இவ்­வா­றான சிக்­கல்­களை எதிர் கொள்­கின்­றோம். குறைந்த விலை­யில் காணி கிடைக்­கி­றது என்று மக்­கள் அதனை வாங்­கு­கி­றார்­கள். அதன் உரி­மம் வேறு நப­ரில் பதிவு இருக்­கும். இது வரை 80 பேர் இவ்­வாறு அறி­யா­மை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றார்.

உயர்கல்வி நிறுவனங்கள் 
கல்வி சார்ந்த பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்கு பல்­க­லைக்­க­ழ­கம் ­­மற்­றும் தொழில் நுட்­பக் கல்­லூ­ரி­யி­லி­ருந்து பிர­தி­நிதி ஒரு­வர்­கூட கூட்­டத்­துக்கு வர­வில்லை என்று நேற்­றைய கூட்­டத் தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. யாழ்ப்பாணத்­தில் உள்ள பல்­க­லைக் கழ­கத்­தில் இந்து சம­யத்­துக்­கான பீடம் ஒன்று வேண்­டும் என்று கல்­விச் சமூ­கத்­தால் சுட்­டிக் காட்­டப்­பட்­டது.

கோப்­பாய் ஆசி­ரி­யர் கலா சாலை­யில் அனைத்­துக் கற்கை நெறி­க­ளும் கற்­பிக்­கக்கூடிய வகை­யில் மனித வளம், பௌதீக வளங்­கள் வேண்­டும் என்று அதன் அதி­பர் வேண்­டு­கோள் விடுத்­தார். தேசிய கல்­வி­யி­யற் கல்லூ­ரி­யில் பதி­வா­ளர் நிய­மிக்­கப்­ப­டா­மை­யால் 4 மில்­லி­யன் அபி­வி­ருத்தி வேலை திட்­டங்­களை நடைமுறைப்­ப­டுத்த முடி­யா­துள்­ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

கல்­வித் தரம் உயர்வு
கடந்த காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் கல்வி மட்­டம் உயர்ந்­துள்­ள­தாக மாகா­ணக் கல்­விப் பணிப்­பா­ளர் தெரி­வித்­தார். க.பொ.த சாதா­ரண தரத்­தில் சித்தி மட்­டம் 2011ஆம் ஆண்டு 55 வீத­மா­கக் காணப்­பட்­டது. தற்­போது 70 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது. தரம் 5 புல­மைப் பரி­சில் பரீட்­சை­யில் 2017ஆம் நாடு 63 வீத சித்தி வீதம் காணப்­பட்­டது. தற்­போது 75 வீத­மா­கக் காணப்­ப­டு­கி­றது. 

க.பொ.த உயர் தரத்­தில் கணி­தம், உயி­ரி­யல், வணி­கம் ஆகிய துறை­க­ளில் சிறந்த பேறுகளைப் பெறு­கி­றோம் என்­றார்.

தென்­ம­ராட்­சிக் கல்வி வல­யத்­தில் எந்­தக் குறை­பா­டும் இல்­லையா என்று கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் விஜயகலா மகேஸ்­வ­ரன் வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரி­டம் கேள்வி எழுப்­பி­னார். வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் வல­ யம் சார்­பான விட­யங்­களை ஒரு சில வச­னங்­க­ளில் வரி­க­ளில் சொல்லி முடித்த நிலை­யில் அவர் இவ்­வாறு வினாக்­களை தொடுத்­தார். அதற்­கும் பணிப்­பா­ளர் பதி­ல­ளித்­தார்.

தண்­ணீர்ப் பிரச்­சினை
யாழ்ப்­பா­ணத்­தில் அதிக நன்­னீரை உறிஞ்சி உவர் நீராக்­கா­மல் நீர் வளச் சபை­யின் அறி­வு­ரை­யின் கீழ் செயற்பட வேண்­டும் என்று உள்­ளூ­ராட்சி மன்­றத்­தி­னர் தெரி­வித்­த­னர். காரை­ந­கர் தண்­ணீர்ப் பிரச்­சி­னை­யும் பேசப்­பட்­டது. கடற்­ப­டை­யி­ன­ரின் மிகை­யான தண்­ணீர் உறுஞ்­ச­லைத் தடுப்­ப­தற்­குப் பிர­தேச சபை­யி­னர் உடன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று துறை சார்ந்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.

சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு நன்றி
சுன்­னா­கம் உள்­ளிட்ட மக்­க­ளின் நீர் நிலை­க­ளுக்­குள் மின் வழங்­கும் நிறு­வ­னத்­தின் கழிவு எண்ணை கலந்த சம்­ப­வத்­தில் பாதிக்கப்பட்ட மக்­க­ளுக்கு இழப்­பீடு வழங்க உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. மக்­க­ளுக்கு நீதியை நிலை நாட்­டிய சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் ஏனை­யோ­ருக்கு நன்றி தெரி­வித்து அது தொடர்­பான தீர்மானம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ சுமந்­தி­ர­னால் முன்­வைக்­கப்­பட்டு ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு