தன் கோவில் வளாகத்தில் சங்கிலியை பறிகொடுத்த மூதாட்டிக்கு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கொடுத்த மெய் சிலிா்க்கவைக்கும் வரம்..

ஆசிரியர் - Editor I
தன் கோவில் வளாகத்தில் சங்கிலியை பறிகொடுத்த மூதாட்டிக்கு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கொடுத்த மெய் சிலிா்க்கவைக்கும் வரம்..

மகன் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறி மூதாட்டியின் சங்கிலியை அபகாித்து சென்ற நபா் அதே இடத்தில் மீண்டும் ஒருவரை ஏமாற்றுவதற்காக காத்திருந்த நிலையில் மூதாட்டியினால் அடையாளம் காணப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த பங்­கு­னித் திங்­கள் பொங்­கல் உற்­ச­வத்­துக்­காக அச்­சு­வே­லி­யி­லி­ருந்து மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்ணகை அம்­பாள் கோவி­லுக்­குச் சென்­றுள்­ளார்.

அப்­போது அவரை உட­ன­டி­யாக அறி­வித்­தல் பந்­த­லுக்கு வரு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் அங்கு சென்றபோது, அங்கு நின்ற ஒரு­வர் மூதாட்­டி­யின் மகன் விபத்­தில் சிக்கி காய­ம­டைந்து சாவ­கச்­சேரி மருத்துவ­ம­னைக்குகொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார்.

மருத்­து­வச் செல­வுக்கு பணம் தர வேண்­டும் என்று அங்கு நின்ற ஒரு­வர் கேட்­டுள்­ளார். மகன் விபத்­தில் சிக்கினார் என்ற பதற்­றத்­தில் பணம் இல்­லை­யெ­னக் கூறி கழுத்­தில் அணிந்­தி­ருந்த 3 பவுண் தங்­கச் சங்கிலியை கழற்­றிக் கொடுத்­துள்­ளார். 

சங்­கி­லியை வாங்­கி­ய­வர் அவ­ச­ர­மாக அங்­கி­ருந்து சென்­றுள்­ளார். சிறி­து­நே­ரத்­தில் அங்கு வந்த மகன் சம்பவத்தை அறிந்து அம்­பா­ளுக்கு நெர்த்தி வைத்­துச் சென்­றுள்­ளார்

பங்­கு­னித் திங்­கள் நான்­காம் திங்­க­ளான நேற்று மூதாட்­டி­யும் மக­னும் கோவி­லுக்கு வந்து வழி­பட்­டுக் கொண்டி­ருந்த வேளை­யில் சங்­கி­லியை வாங்­கிய நபர் அங்கு நின்­றுள்­ளார். அவரை அடை­யா­ளம் கண்டு கொண்ட மூதாட்டி மக­னி­டம் கூறி­யுள்­ளார்.

மகன் அந்த நப­ரைப் பிடித்து அங்­குள்ள பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளார். பொலி­ஸா­ரின் விசா­ர­ணை­யில் மூதாட்­டி­யி­டம் சங்­கி­லியை வாங்­கி­யதை அந்த நபர் ஒப்­புக் கொண்­டார் என்­றும், அதை­ய­டுத்­துப் பொலி­ஸார் அந்த நப­ரைப் பொலிஸ் நிலை­யம் கொண்டு சென்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு