புளியங்குளத்தில் அதிரடியாக நிறுத்தப்பட்ட பேருந்து, காரணம் சொல்லப்படாமல் 15 நிமிடம் சல்லடைபோட்டு தேடிய விசேட அதிரடிப்படை..

ஆசிரியர் - Editor I
புளியங்குளத்தில் அதிரடியாக நிறுத்தப்பட்ட பேருந்து, காரணம் சொல்லப்படாமல் 15 நிமிடம் சல்லடைபோட்டு தேடிய விசேட அதிரடிப்படை..

புளியங்குளம் பகுதியில் கண்டி நோக்கி  பயணித்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு சுமாா் 15 நிமிடங்கள் சோதிக்கப்பட்டதன் பின்னா் தொடா்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து 7.15மணியளவில் கண்டி சென்ற இ.போ.ச பேருந்து இரவு 9.25 மணியளவில் புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வழி மறிக்கப்பட்டது.

பேருந்தில் சென்றவர்களை கீழே இறங்குமாறு தெரிவிக்கப்பட்டடையடுத்து படையினர் எதற்காக இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்கின்றார்கள் என்ற வியடங்களை அறிவதில் பயணிகள் ஒருவருக்கிடையே பேசிக் கொண்டனர்.

எனினும் எதற்காக சோதனை நடத்தப்பட்டது என்ற தகவலைப் படையினர் கூறவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு