உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியவா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியவா் உயிாிழப்பு..

யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுவர் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன்(வயது-40) என்பவரே உயிரிழந்தவராவார் .

 அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை(06)யாழ்.மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பியவர் , 

வீட்டில் குளித்துவிட்டு தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும்,  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அகில இலங்கை இந்து மகாசபாவின் சுன்னாகம் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு