வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக புகுந்த ஐ.நா சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான விசேட குழு..! திணறும் அரசாங்கம்..

ஆசிரியர் - Editor I
வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக புகுந்த ஐ.நா சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான விசேட குழு..! திணறும் அரசாங்கம்..

இலங்கைக்குள் நுழைந்திருக்கும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா சபையின் விசேட குழு இன்று காலை வவுனியா சிறைச்சாலைக்குள் நுழைந்து சுமாா் 1 மணிநேரம் கைதிகளுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலையில் உள்ள நிலமைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடா்பாக செய்தியாளர்கள் சென்றனர். எனினும், செய்தியாளர்கள் தம்மை படம் பிடிப்பதையோ, செய்தியாளர்களுடன் பேசுவதையோ ஐ.நா குழு விரும்பவில்லை.

செய்தியாளர்கள் கருத்து கேட்டபோதும், எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லையென்றும், தமது பயணம் குறித்த படங்களையோ, செய்திகளையோ வெளியிட வேண்டாமென கேட்டுக் கொண்டதாக அங்கிருந்த செய்தியாளா்கள் கூறுகின்றனா். 

இது குறித்து சிறைச்சாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு வினவியபோதும், அவர்களும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு