மின்வெட்டு தொடருமாம்.. அமைச்சா் ரவி கருணாநாயக்கவின் கருத்தை பொய்யாக்கிய மின்சாரசபை..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு தொடருமாம்.. அமைச்சா் ரவி கருணாநாயக்கவின் கருத்தை பொய்யாக்கிய மின்சாரசபை..

இலங்கையில் கடுமையான வறட்சியினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் மின்வெட்டு நடைமுறை 10ம் திகதியுடன் நிறைவுக்கு வரும். என அமைச்சா் ரவி கருணாநாயக்க கூறியிருந்த நிலையில், அவ்வாறு நிறைவுக்கு வராது என மின்சாரசபை தொிவித்துள்ளது. 

இதன்படி மின்தடை கால அட்டவணை மேலும் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 13 தொடக்கம் 20 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியும் என்றார்.

எனினும் அமைச்சர் ரவிகருணாநாயக்க இன்று ஊடகங்களுக்க் கருத்து தெரிவிக்கையில் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் மின் தடை நிறுத்தப்படும். நாங்கள் மன்னிப்புக் கூறுகின்றோம். எனினும் மின்சாரத்தை மட்டுப்படுத்தி பயன்படுத்துமாறும் அமைச்சர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு