முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானாா் து.ரவிகரன்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானாா் து.ரவிகரன்..

முல்லைத்தீவு - செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக அத்திவாரம் வெட்டியமை தொடர்பாக விசாரிக்க, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  இன்றைய நாள் போலீஸ் நிலையம் வருமாறு முல்லைத்தீவு போலீஸாரால் கடந்த 04.04.2019 அன்று அழைப்பாணை ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பாணையை ஏற்று ரவிகரன் அவர்கள் போலீஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். மேலும் போலீஸாரிடம் பௌத்த பிக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணை செய்வதற்காக 07.04.2019  இன்றைய தினம் காலை 09.00மணிக்கு போலீஸ் நிலையம் வருமாறு போலீஸாரால் அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய ரவிகரன் சரியாக காலை 09.00மணிக்கே போலீஸ் நிலையதனதில் முன்னிலையாகியிருந்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு