சற்றுமுன் வடமராட்சி - கொடிகாமம் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

ஆசிரியர் - Admin
சற்றுமுன் வடமராட்சி - கொடிகாமம் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்த நிலையில். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் கஜீபன் (வயது-18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளகிய நிலையில். அதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். எனினும் பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இளைஞர் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு