ரணில் விக்கிரம சிங்க போா்வை போா்த்திய இனவாதி..! அவரை நம்பினால் கடைசியில் நடுத்தெருவுக்கு வருவோம்.

ஆசிரியர் - Editor I
ரணில் விக்கிரம சிங்க போா்வை போா்த்திய இனவாதி..! அவரை நம்பினால் கடைசியில் நடுத்தெருவுக்கு வருவோம்.

மஹிந்த ராஜபக்ஸ இனவாதி, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க போா்வை போா்த்திய இனவாதி. இவா்களில் ரணில் விக்கிரம சிங்க என்ற போா்வை போா்த்திய இனவாதி ஆபத்தானவா். என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சா் வரதராஜ பெருமாள் கூறியுள்ளாா். 

.யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒரே மாதிரியானவர்களே என தெரிவித்துள்ளார்.

ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ நேரடியான இனவாதி என்றும் அதேவேளை ரணில் விக்ரமசிங்க போர்வை போர்த்திய இனவாதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போது எமக்கு இருக்கின்ற மாகாண சபையை தவறவிட்டால் எமக்கான அதிகாரம் என எதுவுமே காணப்படாதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு