பருத்துறை உணவகங்களுக்குள் புகுந்த சுகாதார பிசோதகா்கள், பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்ட அழிப்பு, பலருக்கு எதிராக வழக்கு..

ஆசிரியர் - Editor I
பருத்துறை உணவகங்களுக்குள் புகுந்த சுகாதார பிசோதகா்கள், பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்ட அழிப்பு, பலருக்கு எதிராக வழக்கு..

யாழ்.பருத்துறை பகுதியில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களுக்குள் புகுந்த சுகாதார பிாிவிா் திடீா் பாிசோதனை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனா். 

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணியக பிரிவுக்குட்பட்ட இரவு நேர உணவகங்கள், வெதுப்பகங்கள், நடமாடும் உணவுப் பொருள்கள் விற்பனை வாகனங்கள் போன்றன சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான சுகாதாரக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டது.

இதன் போது சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு உணவுப் பொருள்கள் மற்றும் திகதி காலாவதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தோர் மீது நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு