நிலத்தடி நீாில் ஓயில் கலந்த நிறுவத்தை கப்பாற்றிய சீ.வி.விக்னேஸ்வரன், பொ.ஐங்கரநேசன்..! எந்த முகத்துடன் மக்களை சந்திக்கபோகிறாா்கள்?

ஆசிரியர் - Editor I
நிலத்தடி நீாில் ஓயில் கலந்த நிறுவத்தை கப்பாற்றிய சீ.வி.விக்னேஸ்வரன், பொ.ஐங்கரநேசன்..! எந்த முகத்துடன் மக்களை சந்திக்கபோகிறாா்கள்?

சுன்னாகம் பகுதியில் கிணறுகளில் கழிவு ஓயில் கலந்த விவகாரத்தில் நொதேன்பவர் நிறுவனத்தை காப்பாற்றிய முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பொன். ஐங்கரநேசன் ஆகியோர் மக்களிடம் இனி எந்த முகத்துடன் போகப்போறார்கள்?

அந்த பகுதி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளமை உயர்நீதிமன்ற தீர்ப்பு ஊடாக உறுதியாகியுள்ளது. என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

கிணற்று நீரில் ஒயில் கலக்கவில்லை என்றார். அவர் மூடி மறைத்த விடயங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது நான் இந்த விடயத்தில் வேண்டுமென்று ஊழல்புரிந்தேன் என போலி அறிக்கை விட்டார்.

மக்கள் போராட்டம் நடத்தியபோது போராட்டத்தை முடக்க விக்னேஸ்வரன்,ஐங்கரநேசன் இணைந்து ஆய்வு செய்வதாக கூறி பெருமளவு பணத்தை வீணாக்கினார்கள் வெளிநாடுகளில் இருந்து நிபுணர்களை அழைத்து வந்துள்ளோம் என்றெல்லாம் படம் காட்டினர். 

இதெல்லாம் பொய் என நான் பலமுறை சொன்னபோது அவர்கள் அதனை ஏற்கவில்லை. சுன்னாகம் கிணற்று நீரில் ஓயில் மாசு கலக்கவில்லை, ஆபத்தான உலோகங்கள் இல்லை என அறிக்கைகளை வெளியிட்டார்கள் அந்த அறிக்கைககள் பொய்யானது அதில் ஊழல் நடந்துள்ளது என மாகண சபையில் திரும்ப திரும்ப கூறினேன் நான் சொல்வதை அவர்கள் நம்பவில்லை அதை மறுதலித்தனர்.

தற்போது நீதிமன்ற தீர்ப்பில் உண்மை வெளிவந்துள்ளன. விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் இருவரின் மோசடிகள் தொடர்பில் தனயாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். மோசடி ஆய்வுகளுக்கு எதிராக செலவிட்ட பணத்தை அவர்களிடமிருந்து அறவேண்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு