கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படை அதிரடி..! நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த 26 போ் கூண்டோடு கைது.

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படை அதிரடி..! நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த 26 போ் கூண்டோடு கைது.

சட்டத்திற்கு மாறாக வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்காக கிளிநொச்சியில் தங்கியிருந்த 26 போ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். 

நேற்றைய தினம் (05-04-2019) கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். 

விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை சுற்றி சோதனையிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படடவர்களில் சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றான். இவர்கள் மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு