அலாி மாளிகைக்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூடு.. பொலிஸாா் வெளியிட்ட அதிா்ச்சி காரணம்.

ஆசிரியர் - Editor I
அலாி மாளிகைக்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூடு.. பொலிஸாா் வெளியிட்ட அதிா்ச்சி காரணம்.

பேஸ்புக் ஊடான காதல் விவகாரம் முறிந்தமையினாலேயே விசேட அதிரடிப்படை வீரா் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாா் அதிா்ச்சி தகவல் ஒன்றிணை வெளியிட்டிருக்கின்றனா். 

நேற்று காலை குறித்த அதிரடிபடை வீரர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான தில்ருக் சமரசிங்க என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பேஸ்புக் காதலிக்கு எழுதிய கடிதம் ஒன்று உயிரிழந்த அதிரடிபடை வீரரின் உடமையிலிருந்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த பெண் சில காலங்களாக பேஸ்புக் ஊடாக இந்த அதிகாரியுடன் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

எனினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு