தமிழீழ விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவா்களா வில்பத்து காட்டில் குடியேறியுள்ளனா்..?

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவா்களா வில்பத்து காட்டில் குடியேறியுள்ளனா்..?

தமிழீழ விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவா்களா வில்பத்து காட்டில குடியேற்றப்பட்டனா். என ஆராயவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் டிலான் பெரேரா நாடாளுமன்றில் கூறியுள்ளாா். 

பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்தகுழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

வில்பத்து காடழிப்பு விவகாரம் இலங்கையில் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கும் நிலையில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வில்பத்தை அண்மித்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்ட அனைவரும், வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு