தமிழா்களுக்கு நீதி வழங்கப்படாமைக்கு இந்தியாவே காரணம்..

ஆசிரியர் - Editor I
தமிழா்களுக்கு நீதி வழங்கப்படாமைக்கு இந்தியாவே காரணம்..

போா்குற்றங்கள் தொடா்பில் சா்வதேச விசாரணை நடப்பதை இந்தியாவே தடுத்துக் கொண்டிருக்கின்றது என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சா் வரதராஜ பெருமாள் கூறியுள்ளாா். 

யாழ்ப்பணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,

“இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதாகும். 

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை.அதனை தடுக்கும் முயற்சிகளையே செய்து வருகிறது. 

இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொள்கிறது“ என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு