கடத்தல் நாடகமாடிய பாடசாலை சிறுவன், பொலிஸாாிடம் ஏச்சு வாங்கிய சிறுவனும், சிறுவனின் பெற்றோரும்..

ஆசிரியர் - Editor I
கடத்தல் நாடகமாடிய பாடசாலை சிறுவன், பொலிஸாாிடம் ஏச்சு வாங்கிய சிறுவனும், சிறுவனின் பெற்றோரும்..

நண்பா்களுடன் நீண்டநேரம் செலவிட்ட பாடசாலை சிறுவன் வீட்டுக்கு செல்ல நேரமானதால் பெற்றோருக்குப் பயந்த தன்னை கடத்தியதாக பொய் கூறி அந்த விடயம் பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது. 

யாழ்ப்பாணம் வடமராட்சி மாலு சந்திப் பகுதியில் நண்பர்களுடன் நீண்ட நேரம் பொழுதைக் கழித்த சிறுவன், வீடு திரும்பத் தாமதம் ஆகியதால், 

தன்னை சிலர் வானில் கடத்திச் சென்றனர் என்றனர் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்பதற்றமடைந்த பெற்றோர் நெல்லியடி காவல்நிலையத்துக்கு சிறுவனை அழைத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளனா்.

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுவன் பொய் கூறியதை அறிந்து கொண்டதனையடுத்து சிறுவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு