மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் தாம் இனத்திற்கு துரோகம் செய்வதை ஒப்புக் கொண்டாா் நாடாளுமன்ற உறுப்பினா்..

ஆசிரியர் - Editor I
மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் தாம் இனத்திற்கு துரோகம் செய்வதை ஒப்புக் கொண்டாா் நாடாளுமன்ற உறுப்பினா்..

தமிழ் மக்களுடைய எதிா்பாா்ப்புக்களுக்கும், அபிலாஷைகளுக்கும் மாறாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கூறியுள்ளாா். 

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ் மக்களி கொள்கைக்கு முரணாக கூட்டமைப்பு செயற்படுகின்றதா? என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், “தமிழ் மக்களின் அபிப்பிராயத்திற்கு எதிராகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

எனினும், இது குறித்த விளக்கத்தை வழங்கினால் அதை புரிந்துகொள்ள கூடியவர்கள் 10 வீதமானவர்களே இருக்கின்றனர். ஏனையவர்கள் அவ்வாறான நிலையில், இல்லை.

ஏனெனில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், எவ்வித நிபந்தனையும் இன்றி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றோம் என்ற எண்ணமே மக்களின் மனதில் இருக்கின்றது.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கதுடன், ஒப்பிடும் போதும் இந்த அரசாங்கம் வில விடயங்களை கையாள்வதில் முன்னேற்றம் அமைந்துள்ளது.

மறுபுறம் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதைத் தவிரவும், வேறு மாற்று வழிகளும் எமக்குத் தெரியவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு