அலாி மாளிகைக்குள் துப்பாக்கி சூடு..!

ஆசிரியர் - Editor I
அலாி மாளிகைக்குள் துப்பாக்கி சூடு..!

அலாி மாளிகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை வீரா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். 

அவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் இந்த வீரர் இன்று முற்பகல் பாதுகாப்பு கடமையில் இருந்து போது இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

31 வயதுடைய குறித்த STF வீரர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு