மின்வெட்டுக்கு அரசாங்கம் கூறும் காரணங்கள் அப்பட்டமான பொய்கள்..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டுக்கு அரசாங்கம் கூறும் காரணங்கள் அப்பட்டமான பொய்கள்..

இலங்கையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தக் காரணம் நீா்மட்டம் வீழ்ச்சியடைந்தமையோ, வறட்சியோ அல்ல என கூறியிருக்கும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினா் சுனில் ஹெந்துன்நெத்தி, முறையான மின் விநியோக திட்டம் இல்லாமையே காரணம் என கூறியுள்ளாா். 

தற்போது மின்சார துண்டிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிறு வர்த்தக முயற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலைமைக்கு நீர்நிலைகளில் போதிய நீர் இன்மையே காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை.

காலத்துக்கு ஏற்ப மின்சார விநியோகத்தை முகாமை செய்வதற்கான திட்டமிடல் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு