மானிப்பாய், சுன்னாகம் பகுதிகளில் வாள்வெட்டுக் குழுக்கள் அட்டகாசம்!

ஆசிரியர் - Admin
மானிப்பாய், சுன்னாகம் பகுதிகளில் வாள்வெட்டுக் குழுக்கள் அட்டகாசம்!

சுன்னாகம்- கந்தரோடை பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த மூதாட்டி மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் அடித்து நொருக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

முகத்தை மூடி கட்டியவாறு வீட்டினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று இரவு ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பல் ஒன்று புகுந்து வீட்டின் கதவுகள், யன்னல்கள், என்பவற்றை அடித்து சேதமாக்கியதுடன், வீட்டினுள் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.

அத்துடன் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு