3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அயர்லாந்து

ஆசிரியர் - Admin
3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அயர்லாந்து

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் அஸ்கர் ஆப்கன் 75 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் அடிக்க ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ஆன்டி பால்பிரைனி ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் அடிக்க அயர்லாந்து 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் 8-ந்தேதி நடக்கிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு