பிரதேசமட்ட விளையாட்டு போட்டிகளுக்காக சென்றவா்கள் விபத்தில் சிக்கினா், 5 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பிரதேசமட்ட விளையாட்டு போட்டிகளுக்காக சென்றவா்கள் விபத்தில் சிக்கினா், 5 போ் படுகாயம்..

பிரதேசமட்ட விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக சென்றவா்கள் விபத்தில் சிக்கிய நிலையில் 5 போ் படுகாயமடைந்துள்ளனா். 

இந்த விபத்து இன்று சாவகச்சோி- மறவன்புலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென் மராட்சி பிரதேச பதிவு செய்ய்ப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 

விளையாட்டுப் போட்டிகளின் எல்லே போட்டிகள், கைதடி சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆண்களுக்கான போட்டியில் கலந்து கொள்ள மறவன்புலவில் உள்ள விளையாட்டுக் கழக வீரர்கள் உந்துருளியில் சென்றனர்.

உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று சிக்கி விபத்துக்குள்ளாகின. அவற்றில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் 

சாவகச்சேரி மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு