“நீதம்” 7வது மலா் வெளியீடு இன்று, பிரதம நீதியரசா் சி.துரைராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டாா்..
இலங்கையின் உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு சி . துரைராஜா பிரதம விருந்தி னராக கலந்து சிறப்பிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் முன்னெடுக்கும் நீதம் - 07 மலர் வெளியீட்டு வி ழா காலை 09.30 மணிக்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மண்டபத்தில் இடம்பெ ற்றது.
இந் நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் சி . துரைராஜா அவர்கள் பிரதம விருந்தின ராகவும் , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் யாழ் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் மூத்த சட்டவாளர்கள் , சட்டபீட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நீதம் - 07 நூலின் முதல்ப் பிரதி பிரதம விருந்தினர் நீதியரசர் சி.துரைராஜாவுக்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து சிறப்பு பிரதிகளை உயர் நீதியரசர் வழங்கி வைத்தார்