இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில் ஜெனிவா பயணமாகிறார் விக்கி?

ஆசிரியர் - Admin
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில் ஜெனிவா பயணமாகிறார் விக்கி?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். மகா சிவராத்திரிக்குப் பின்னரே அவர் நாடு திரும்புவார். அதன்பின்னரே, அவர் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு