சைவ மாணவர் சபையின் ஏற்பாட்டில் சிவராத்திரி கொடிவாரம் அனுஸ்டிப்பு!

ஆசிரியர் - Admin
சைவ மாணவர் சபையின் ஏற்பாட்டில் சிவராத்திரி கொடிவாரம் அனுஸ்டிப்பு!

சைவ மாணவர் சபையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவராத்திரி வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

சிவராத்திரி வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான கொடிவாரம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கொடி வாரம் ஊடாக சேகரிக்கப்படும் நிதி குறித்த பாடசாலையின் சைவ சமய வளர்ச்சிக்கு உபயோகிக்கப்படும்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண 45 பாடசாலைகளுக்கு சிவராத்திரி தொடர்பாக காலைப் பிரார்த்தனையில் வளவாளர்களைக் கொண்டு சொற்பொழி நிகழ்வும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 

சைவ மாணவர் சபையானது பாடசாலை மாணவர்களிடையே சைவ சமயம் தொடர்பான பற்றுதலையும் உறுதிப்பாட்டினையும் உருவாக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு