ஆசிய இளையோருக்கான பழுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த முல்லை மாணவி

ஆசிரியர் - Editor II
ஆசிய இளையோருக்கான பழுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த முல்லை மாணவி

ஆசிய இளையோர் பழுதூக்கு போட்டியில் 90 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

செல்வபுரம், வடக்கு வவுனிக்குளத்தை சேர்ந்த மல்லாவி மத்திய மாகவித்தியாலத்தில் தரம் 9இல் கல்விகற்று வரும் தேவராசா தர்சிகா என்னும் மாணவியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவர் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பழுதூக்கும் பிரிவில் 90 கிலோ எடையை தூக்கி சர்வதேச சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த மாணவியின் சாதனையை பாராட்டும் வகையில் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் போ.ரவிச்சந்திரன் தலைமையில் இன்றைய தினம் பாராட்டுவிழா நடைபெற்றுள்ளது.

வறுமைக்கோட்டின் கீழ்வாழும் குறித்த மாணவியின் சாதனையை பலரும் பாராட்ட வேண்டியது என பாடசாலைச் சமூகம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு