சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்த 70 இலங்கையா்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்த 70 இலங்கையா்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை..

பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான ாியூனியன் தீவில் நுழைந்து பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய முயற்சித்த 70 இலங்கையா்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கின்றது. 

குறித்த 70 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி சிலாபம் பகுதியிலிருந்து 60 அடி நீளமான படகில் பயணித்த குறித்த 70 பேரும் கடந்த 4 ஆம் திகதி ரீயூனியன் நகரை சென்றடைந்துள்ளனர்.

குறித்த படகில் பயணித்த இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு