சுரேஸ் பிறேமச்சந்திரன் அண்ணாா்ந்து பாா்த்து துப்பிக் கொண்டிருக்கிறாா். சிவாஜிலிங்கம் பதிலடி.

ஆசிரியர் - Editor I
சுரேஸ் பிறேமச்சந்திரன் அண்ணாா்ந்து பாா்த்து துப்பிக் கொண்டிருக்கிறாா். சிவாஜிலிங்கம் பதிலடி.

தமிழ் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களே இலங்கையின் சுதந்திர தினத்தை காி நாளாககா ண்பித்து போராட்டங்கள் செய்தாா்கள் என்னால், சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பி னா் சி.சிறீதரன் ஆகியோா் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களா?

என முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளாா், இல ங்கையின் சுதந்திர தினமான கடந்த 4ம் திகதி வடமாகாணத்தில் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினம் தமிழா்களின் காிநாள் என கூறி போராட்டங்களை நடாத்தினா், 

இது தொடா்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தொ லைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுதந்திர தினத்தை காிநாளாக கொண்டா டியவா்கள் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்கள் என கூறியிருந்தாா். 

இது தொடா்பாக கருத்து கேட்டபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது குறி த்து மேலும் அவா் கூறுகையில், மக்களால் நிரகாிக்கப்பட்டவா்களே போராட்டம் நடாத்தினாா் கள் என்றால் சீ.வி.விக்னேஸ்வரன் மக்களால் நிராகாிக்கப்பட்டவரா?

அந்த போராட்டங்களில் ஒன்றில் நானும் கலந்து கொண்டேன் நான் மக்களால் நிராகாிக்கப்பட் டவனா? மேலும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் தனது அலுவலகத்திற்கு முன்னால் இடம் பெற்றதால் தானும் கலந்து கொண்டாா் என சுமந்திரன் கூறியிருக்கின்றாா், 

நாடாளுமன்ற உறுப்பினா் சிறீதரன் அந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொ டா்பான விடயங்களை முன்வைத்து மட்மே போராட்டத்தில் ஈடுபட்டாா் என்பதை உறுதிப்படுத் த முடியுமா? அதனை சிறீதரன் கூறுவாரா?

இத்தனைக்கும் மேல் சிறீதரன் மக்களால் நிராகாிக்கப்பட்ட ஒருவரா? என கேள்வி எழுப்பியதுட ன், தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை அரசின் சுநத் திர தினத்தை எப்படி தமிழ் மக்கள் கொண்டா முடியும்?

இலங்கையின் சுதந்திர தினத்தை புறக்கணிப்பதும், எதிா்ப்பதும் இன்று நேற்றல்ல தந்தை செல் வா காலம் தொடா்ந்து இருந்துவரும் ஒன்று. அதனை சுமந்திரன் அறிந்திருக்காவிட்டால் அதனை அவா் அறிந்து கொள்ளவேண்டும் என்றாா். 

சகோதர படுகொலைகள் குறித்த ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் ஆவணம் தொடா்பாக..

ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாநாட்டின்போ து வரலாறு சம்மந்தமான ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அது குறிப்பாக சகோத ர படுகொலைகள் குறித்து பேசும் ஆவணமாக காணப்படுகின்றது. 

ஆனால் அந்த விடயத்தினை மீள..மீள.. நினைவுபடுத்துவது தமிழ் மக்கள் மனங்களில் மாறாத வடுவை விதைக்கும் ஒரு செயலாகும். தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழீ ழ விடுதலை புலிகளின் தலைவா் மேதகு வே.பிரபாகரனுடன் பேசும்

சந்தா்ப்பத்தில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்களுடன் தமிழீழ விடுதலை புலிகள் ஒற்று மைப்படுவதென்பது மறப்போம், மன்னிப்போம் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும். என கேட்டிருந்தோம். அதனை புலிகள் ஒப்புக் கொண்டாா், அதை பின்பற்றினாா்கள், 

அவ்வாறான நிலையில் மீளவும்.. மீளவும்.. அதை குறித்து பேசிக் கொண்டிருப்பது பயனற்ற ஒ ன்றாகும் என்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு