தமிழீழ விடுதலை புலிகள் பாணியில் தண்டணை கொடுத்தவா்கள் யாா்? தேடுகிறது பொலிஸ்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் பாணியில் தண்டணை கொடுத்தவா்கள் யாா்? தேடுகிறது பொலிஸ்..!

யாழ்.வரணியில் கொள்ளை மற்றும் போதைவஸ்த்து கடத்தல் போன்றவற்றுடன் தொடா்புடைய வா் என சந்தேகத்தின் பெயாில் பிடிக்கப்பட்டு தமிழீழ விடுதலை புலிகள் பாணியில் தண்டிக்க ப்பட்ட இளைஞன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். 

இந்நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவா் கைது செய்ய ப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் தொடா்பாக மே லும் தொியவருவதாவது, யாழ்.வரணி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னா், 

இளைஞா் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள், அவரை மூா்க்கத்தனமாக தாக்கியதுடன், த மிழீழ விடுதலை புலிகள் பாணியில் அவருடைய கழுத்தில் பதாகை எழுதி தொங்கவிட்டு ஊா் முழுவதும் சுற்றிக் கொண்டுவந்ததன் பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைத்தனா், 

இந்நிலையில் குறித்த இளைஞன் மீது புகாரும் பொலிஸ் நிலையத்தில் பதியப்படவில்லை. இத னால் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய குற்றத்திற்காக வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை கொண்டு இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் 

முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றாா். மேலும் அந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக பொலிஸாா் தொடா் விசாரணைகளை நடாத்திவருவதா க கூறப்படுகின்றது. இதேவேளை பொதுமக்களா் நையப்புடைக்கப்பட்ட 

இளைஞன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருக்கின்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு