காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் ஏமாற்றப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் ஏமாற்றப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் வவுனியாவில் போராட்டம் நடாத்தி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை உறவினா்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனா். 

கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்பாக வவுனியாவில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை அரசின் பிரதிநிதி யாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சந்தித்திருந்தார்.

மேலும் 2017 பெப்ரவரி 9ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து தங்கள் பிரச்சினை கள் குறித்துப் பேச ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார். அதற்கமைய உண்ணா வி ரதத்தை கைவிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 

கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமருடன் சந்திப்பு ஒன்றை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந் தனர். குறித்த சந்திப்பு இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டே இன்றைய தினம் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சிங்கள தலைமைக்கும், பௌத்தத்திற்கும் அடிமைகளாகிய சுமந்திரனும், சம்பந்த னும், (09.02.2017) ஆம் ஆண்டு அரசிற்கும், காணாமல் ஆக்கபட்ட உறவுகளிற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் அரசுடன் சேர்ந்து, 

கூட்டமைப்பும் தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது வருடம் இன்று. என்று எழுதப்பட்ட பதாதை யை தாங்கியிருந்ததுடன், அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்திய வண்ணம் கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 719 நாட்களாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு