தமிழ்தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவா் சுமந்திரனா? சரவணபவன் கூறிய இரகசியம்..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவா் சுமந்திரனா? சரவணபவன் கூறிய இரகசியம்..!

தமிழ்தேசிய கூட்டமைப்பை தனக்குள்ள அனுப்பத்தினால் இரா.சம்மந்தன் சாியான பாதையில் கொண்டு நடாத்துவாா். அந்த இடத்தில் அனுபவம் அற்றவா்கள் வருவாா்களானல் கூட்டமைப்பி னை எப்படி கொண்டு நடத்துவாா்கள் என்பது குறித்து என்னால் எதுவும் கூற இயலாது. என தமி ழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் ஈ.சரவணபவன் கூறியுள்ளாா். 

அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த அவர் அங்கிருந்து ஒலிபரப்பாகும் எஸ்.பி.எஸ். வா னொலி நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா? என எழுப்பப்பட்ட கேள் விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத் துத் தெரிவிக்கையில்,

எமது கட்சிக்கு ஒரு பொதுக் குழு இருக்கின்றது. பலருக்கும் பல விதமான அபிப்பிராயங்கள் இரு க்கும். அந்த இடத்தில் என்ன முடிவு, யார் பொருத்தமானவர்கள் என்று எடுக்கப்போகின் றார்கள் அங்குதான் தெரியும். வெளியில் சொல்வதை வைத்து முடிவெடுக்க முடியாது. ஒரு மாயை எங்க ளிடம் உள்ளது. நான்கு விதமாகப் பேசிவிட்டால் அல்லது 

நான்கு விதமாக ஒன்றை நடத்திவிட்டால் அவர்தான் அடுத்த தலைவர் என்று யோசிப்பார்கள். உ யர்நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் என்றைக்குமே நிர்வாகம் செய்தது கிடையாது. அவரைக் கொண்டுவந்து நிர்வாகம் செய்வதற்கு வடக்கில் முதலமைச்சராக்கியமையும் இப்படி நடந்த பிழைதான். அதனைக் கட்சி யோசித்துச் செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு