வடக்கில் போதைப் பொருள் விதைக்கப்பட்டிருக்கிறது, கடத்தல்காராா்கள் வேறு யாருமல்ல அரசியல்வாதிகளே..

ஆசிரியர் - Editor I
வடக்கில் போதைப் பொருள் விதைக்கப்பட்டிருக்கிறது, கடத்தல்காராா்கள் வேறு யாருமல்ல அரசியல்வாதிகளே..

போரை முடிவுக்குக் கொண்டுவந்த அரசாங்கம் வடக்கில் போதை பொருட்களை விதை்துள்ள தாக கூறும் அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், வடகிழக்கில் அரசியல்வாதிகளே போதை பொ ருள் கடத்துகிறாா்கள் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். 

மன்னார்-அடம்பன் மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப் பொருட்களை விதைப்ப தற்கு அரசியல் வாதிகளே காரணம் எனத் தெரிவித்த அவர் தங்களுடைய சுய இலாபத்திற்காக தங்களுடைய வாகனங்களிலே போதை பொருட்களை கொண்டு செல்கின்றார்கள் 

எனவும் தெரிவித்துள்ளார். பாரளுமன்ற உறுப்பினர் , அமைச்சர் என்று குறிப்பிடும் போது காவல்துறை அதிகாரிகள் வாகங்களை சோதனையிடுவதில்லை எனவும் அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாமல் தான் 

கடந்த காலங்களில் போதை பொருட்கள் அதிகம் எமது பிரதேசங்களுக்குள் வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை பல இடங்களில் கண்டு பிடித்துள்ளோம். நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் .இதை நிச்சயமாக நிறுத்த வேண்டும்

இதனால் தான் சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வல்லுறவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு