வடமாகாண முன்பள்ளி ஆசிாியா்களுக்கான விளையாட்டு போட்டி..

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்பள்ளி ஆசிாியா்களுக்கான விளையாட்டு போட்டி..

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

ஏற்கனவே கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டு  அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 26ஆம் திகதி நடைபெற்றன.

இதில் முன்பள்ளி ஆசிரியர்கள் வலைப்பந்தாட்டம், கிளித்தட்டு, கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல் மற்றும் விநோதஉடை போன்ற தனி நிகழ்வு மற்றும் குழு நிகழ்வுகள் மூலம் 

தமது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்வின் இறுதியில் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணிகளிற்கு பிரதம விருந்தினரால் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு