குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களுக்கான நினைவுதூபி விவகாரம், வல்வெட்டித்துறை நகரசபையில் குழப்பம்..

ஆசிரியர் - Editor I
குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களுக்கான நினைவுதூபி விவகாரம், வல்வெட்டித்துறை நகரசபையில் குழப்பம்..

வல்வெட்டித்துறை- தீருவில் வெளியில் தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளி ட்ட 12 மாவீரர்களுக்கு நினைவுதூபி அமைப்பது தொடர்பான விவாதத்தில் குழப்பம். 

வல்வெட்டித்துறை நகரசபையின் அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களுக்கான நினைவுதூபி அமைப்பது குறித்து ஆராயப்பட்டது. 

இதன்போது உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் உருவானது. இதனால் சபையில் குழப்பம் எழுந்த நிலையில் சபை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு